பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தக் கோரியும் திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆசிரியருக்கு பணி பாதுகாப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் ரமணி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உரிய இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும். இது போன்ற ஆசிரியர் விரோத சம்பவம் இனி எங்கும் நடைபெறாத படி கொலையாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் நடராஜன தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா, இராமலிங்கம், காசிராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ரவி கண்டன உரை நிகழ்த்தினார் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 28.10.2004 முதல் 3.11.2004 வரை நாடு முழுவதும் “நேர்மை என்னும் கலாச்சாரமே, தேசத்திற்கான செழுமை” என்ற வாசகத்துடன் கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டுநமது திருப்பத்தூர் மாவட்ட லஞ்சம் […]
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று (21.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர்மழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது,சக்கரக்கோட்டை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவின் சார்பில் கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக […]