
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தூய நெஞ்ச கல்லூரி வரை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான சிலிண்டர்கள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசந்திரவல்லி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி சியாமளா தலைமை. தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று தூய நெஞ்சக் கல்லூரி வரை நிறைவு பெற்றது.
இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகள் பாதுகாத்தல், குழந்தைகள் கல்வி இடைநிற்றலை தடுத்தல் குழந்தைகள் உதவி எண் 1098 ஆகியவை குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடியும் கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்கமல் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
