உண்மையான சமூக நீதியைப் பற்றி தமிழக அரசியல் கட்சிகள் கவலைப்படவில்லை” கோவையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக நீதிக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்ன சபாபதி குற்றச்சாட்டு..

இதர பிற்படுத்தப்பட்ட சமூக உரிமைக்கான அமைப்பு தலைவர் ரத்ன சபாபதி, கோவை பந்தயசாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது..
“உண்மையான சமூக நீதியை பற்றி தமிழக அரசியல் கட்சிகள் கவலைப்படவில்லை” என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, ஒபிசி, எஸ்இ, எஸ்டி, மாணவர்களை உயர்கல்வி நிலையங்களில் மனஅழுத்தம், கேலி, கிண்டல் போன்ற வேற்றுமைகளிலிருந்து பாதுகாக்க
பல்கலைக்கழக மானியக்குழு யூஜிசி ஜனவரி 13ஆம் தேதி அறிவித்த
“உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள் 2026”
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விதிமுறை என அவர் கூறினார்.
ரோஹித் வெமுலா, பயல் தளத்வி போன்ற மாணவர்களின் மரணங்களுக்குப் பிறகு,
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டதாகவும்,
இது முழுக்க முழுக்க ஒபிசி எஸ்இ எஸ்டி, மாணவர்களின் பாதுகாப்புக்கானது என்றும் விளக்கினார்.
ஆனால், இந்த விதிகள் குறித்து
தமிழக அரசியல் கட்சிகளோ, சமூக அமைப்புகளோ வரவேற்பு தெரிவிக்கவில்லை என்றும்,
வட இந்தியாவில் எதிர்ப்பு எழுந்தபோதும் தமிழகத்தில் அமைதி நிலவியது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும்,
42 ஆண்டுகளாக ஓபிசி இடஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகள்,
மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வு மறுப்பு, ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்இ போன்ற நிறுவனங்களில் நடக்கும் அநீதிகள் குறித்து
அரசியல் கட்சிகள் எந்த உறுதியான போராட்டமும் நடத்தவில்லை என்றும் சாடினார்.
“சமூக நீதி” என்ற பெயரில் ஓட்டு வங்கி அரசியல் மட்டுமே நடக்கிறது
என்று கூறிய ரத்ன சபாபதி,
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள்
இந்த அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை உணர வேண்டும்
என்று அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.