
கோவையில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் கோவை நயாகரா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது…
வேளாண் தொடர்பான இந்திய அளவில் முதன்மையான அக்ரி இன்டெக்ஸ் 2025 எனும் வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் துவங்கியது..
ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இண்டெக்ஸ் விவசாய கண்காட்சி மொத்தம் 7 அரங்கில் நடைபெற்று வருகிறது..
விவசாயிகள் பயன் பெறும் விதமாக நடைபெற்று வரும் இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வேளாண் தொடர்பான நவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன..
கண்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கு பெறும் கோவையை சேர்ந்த நயாகரா சொல்யூஷன்ஸ் நிறுவனம் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் தனது புதிய நவீன தொழில் நுட்ப சாதனங்களை காட்சி படுத்தி இருந்தனர்…
முன்னதாக நயாகரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார் வேளாண் கண்காட்சியை துவக்கி வைத்த முக்கிய விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்…
விவசாய துறையில் நயாகரா சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து இயக்குனர் ரவிக்குமார் கூறுகையில்,
விவசாயம் தொடர்பான துறையில் தானியங்கி முறையில் செயல்படும் உபகரணங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்த அவர்,விவசாயிகளிடம் நவீன தொழில் நுட்பத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக குறிப்பிட்டார்…
