100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கிறிஸ்மஸ் கேரள்ஸ் கொண்டாடிய கிறிஸ்தவர்கள்.

வருகின்ற 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் நிலையில் இயேசு குழந்தையாக பிறந்ததை அறிவிக்கும் விதமாக கத்தோலிக்க திருச்சபை மூலம் பல்வேறு இடங்களில் கிறிஸ்மஸ் காரல் நிகழ்ச்சி வீடு வீடாக சென்று பிரார்த்தனை செய்யப்படுவது வழக்கம் இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் உள்ள புனித அருவியின் அன்னை கத்தோலிக்க திருச்சபையில் இயேசு கிறிஸ்து குழந்தையாக பிறப்பதை அறிவிக்கும் விதமாக பங்குத்தந்தை மரிய ஜோசப் தலைமையில் பங்கு மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் வீடுகளுக்கு சென்று கிறிஸ்மஸ் கேரள்ஸ் பிரார்த்தனை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு புனித அருவியின் அன்னை ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை மரிய ஜோசப் தலைமையிலான பங்கு மக்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமனிந்து குழந்தை இயேசுவின் சுரூபத்தை வைத்து கிறிஸ்மஸ் கேரள்ஸ் பிரார்த்தனை செய்யப்பட்டு 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.