இந்திய அரசியலமைப்பு தினம் உறுதி மொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி தலைமையில் வாசிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுடன், தருமபுரி மக்களவை உறுப்பினர் ஆ மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி, முதன்மை கல்வி அலுவலர் ஐ ஜோதி சந்திரா உள்ளிட்ட பலர் இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசித்தனர்.