
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயத்திற்கும், ஆலங்காயத்திலிருந்து ஆம்பூர் பகுதிக்கும் புதிய வழித்தடத்தில் தமிழக அரசு பேருந்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார். ஆலங்காயத்தில் இருந்து செக்குமேடு வழியாக ஜோலார்பேட்டை பகுதிக்கு நீண்ட நாட்கள் பேருந்து வசதி இல்லாமல் இருந்த நிலையில் பேருந்து வசதி வேண்டுமென்று ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இதனை கருத்தில் கொண்டு இன்று புதிய வழித்தடத்தில் மகளிர் காண விடியல் பயண பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார் இதில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன். ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி. மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார். ஜோலார்பேட்டை சேர்மன் காவியா விக்டர் மகளிர் காண விடியல் பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் மகளிர் காண கட்டணமில்லா பயணச்சீட்டை வழங்கி விடியல் பயண பேருந்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
