
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கும்பகோணத்தில் இருந்து நரசிங்க மங்கலம் வரை தடம் எண் 20 நகர பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்தை கண்டியூர் வரை நீட்டித்து தரவேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் இருந்து நரசிங்க மங்கலம் வரும் தடம் எண் 20 யை நேற்று முதல் கண்டியூர் வரை நீட்டித்து கண்டியூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வகையில் நீட்டிப்பு வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் பிரான்சு மேனேஜர் மற்றும் அதிகாரிகள், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் நல்லம்பூர் கே.கிருஷ்ணமூர்த்தி, கண்டியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர பாலு( எ) ராமசுப்பிரமணியன், நரசிங்க மங்கலம் ராமையன் மற்றும் கண்டியூர் கிராமவாசிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
