திருச்சி அருகே வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தியமலை வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவர் சபரி, படிப்பில் ஆர்வம் காட்டாததால் தந்தை கண்டித்ததால் மனமுடைந்து

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.