
காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிக்கும் முதுகலை தமிழ் பட்டதாரி மாணவியான நீனா, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் பகுதியில் செயல்படும் ஒன் மேன் மார்ஷியல் அகாடமியில் கிக் பாக்ஸிங் பயிற்சிகளை பயின்று வருகிறார். மேலும் இவர் பல்வேறு மாநில சர்வதேச போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களையும் வென்று உள்ளார்.
இந்நிலையில் அக்டோபர் 6ம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை கம்போடியா நாட்டில் நடைபெற்ற வாக்கோ ஆசிய கிக் பாக்ஸிங் போட்டியில் இந்தியாவிலிருந்து மொத்தம் 45 பேர்கள் சென்றதில் தமிழ்நாடு சார்பில் இவரும் பங்கேற்றார்.
பாயிண்ட் ஃபைட், லைக் கான்டக்ட், பார்ம்ஸ் என மூன்று போட்டிகளில் 55 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற நிலையில்
காஞ்சிபுரம் வீராங்கனை நீனா, தாய்லாந்து,கம்போடியா வீராங்கனைகளை வீழ்த்திய நிலையில்,இறதி போட்டியில் ஈரான் வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் இரு போட்டிகளில் வெள்ளி பதக்கங்களை பெற்ற நீனா இத்தகைய சாதனையால் காஞ்சிபுரத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
இதுகுறித்து கிக் பாக்ஸிங்
வீராங்கனை நீனா தெரிவிக்கையில்,
காஞ்சிபுரம் ஓன்மேன் பயிற்சி மையத்தில் சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர் கனேஷ் குமார் மற்றும் பல்வேறு ஆட்ட நுணுக்கங்களை கற்றுத்தந்த தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக செயல்பட்டு நான் தங்கம் வென்று இந்தியாவிற்கும் குறிப்பாக காஞ்சிபுரத்திற்கும் பெருமை சேர்த்ததாக தெரிவித்தார்.
மேலும் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,என் போன்ற வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஆசிய போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 2.5 லட்சம் காசோலையாக வழங்கி போட்டிக்கு அனுப்பி வைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது என்றும்,
இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீராங்கனைகளையும் ஊக்குவிக்கும் வகையில் தற்போது விளையாட்டுத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது பயிற்சியாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உடனிருந்தனர்.
