
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிதாக தொடங்கிய We The Leaders இயக்கத்தில் தமிழக முழுவதும் தன்னார்வலர்கள் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை தத்தனேரி பகுதியில் தமிழகத்தில் முதன் முறையாக உறுப்பினர் சேர்க்கைக்கான பதிவு அலுவலகத்தை அந்த இயக்கத்தின் தன்னார்வலர் நாச்சியப்பன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாச்சியப்பன் ,
தங்களது இயக்கத்தில் 18. 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும். குறிப்பாக மதுரையில் 60,000 மேற்பட்டோர் இணைந்துள்ளனர் அதில் ஜென்சி இளைஞர் அதிக அளவில்இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக தமிழகத்தில் முதன்முறையாக பதிவு அலுவலகம் மதுரையில் திறக்கப்பட்டு உள்ளதாகவும் புதிதாக இயக்கத்தில் இணைபவர்களுக்கு இந்த பதிவு அலுவலகத்தில் தேவையான உதவிகளை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
அண்ணாமலை தொடங்கியுள்ள இந்த இயக்கம் அடுத்த ஜூலை மாதம் முழுவதும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதமாகவும் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மாதமாகவும் பணிகளை முன்னெடுத்து செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்காக வீத லீடர்ஸ் செல்போன் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
