ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்-மாவட்ட செயலாளர் பங்கேற்பு!!!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதியார் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் B.மலர்விழி ஜெயபாலா அவர்களின் தலைமையில்,ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தொகுதி,ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கா.செல்வ ரஞ்சன்தாஸ் ஏற்பாட்டில்,பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும்,அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி,உலகப் பட்டினி தினமான இன்று பசி எனும் பிணியை போக்கிட ராமநாதபுரம் மாவட்டம் வழிவிடு முருகன் கோவிலும்,கலை மற்றும் கலாச்சார பண்பாட்டு அணி மலை ராஜ் ஏற்பாட்டில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலும் பொதுமக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி பொருளாளர் தமிழ்ச்செல்வன்,இணைச் செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி,மதன்ராஜ், நாகார்ஜூன்,துணைச் செயலாளர்கள் பிரவீன் குமார்,கார்த்திக் ராஜ் ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தளபதி தமீம்,ராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் நைனா முகமது, துணைச் செயலாளர் முனீஸ்,இணை அமைப்பாளர் காதர்,மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் சுகுமார்,மாவட்ட தொழிலாளர் அணி பிரவீன்,மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் விமலா,மாவட்ட பயிற்சிபாசறை அணி அமைப்பாளர் அருண்குமார்,ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் நிசாத்,இணைச் செயலாளர் அல்அகமத்,மண்டபம் ஒன்றிய செயலாளர் ரெய்மண்ட், தங்கச்சிமடம் கிளை செயலாளர் ராகுல்,பட்டணம்காத்தான் கிளை செயலாளர் தங்கம் மதன்,ராமநாதபுரம் நகர் தொண்டரணி அமைப்பாளர் விஜயதயலான்,கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் ஆசிக் ரஹ்மான்,கீழக்கரை நகர் மகளிரணி அமைப்பாளர் ஆயிஷா பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.