பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தக் கோரியும் திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆசிரியருக்கு பணி பாதுகாப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் ரமணி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உரிய இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும். இது போன்ற ஆசிரியர் விரோத சம்பவம் இனி எங்கும் நடைபெறாத படி கொலையாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் நடராஜன தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா, இராமலிங்கம், காசிராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ரவி கண்டன உரை நிகழ்த்தினார் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுக்கா,நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை திட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மிஷன் இயற்கை திட்ட […]
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்று பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு , மாவரசி அம்மன் கோவில் உள்ளிட்ட பிட்டு களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள […]
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மேல உளூர் நரிக்குறவர்கள் குடியிருப்பில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தஞ்சை ஜோதி […]