பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தக் கோரியும் திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆசிரியருக்கு பணி பாதுகாப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் ரமணி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உரிய இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும். இது போன்ற ஆசிரியர் விரோத சம்பவம் இனி எங்கும் நடைபெறாத படி கொலையாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் நடராஜன தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா, இராமலிங்கம், காசிராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ரவி கண்டன உரை நிகழ்த்தினார் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது. அனைவரும் தங்களுக்கு […]
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜீ அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:- இராமநாதபுரம் நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட செம்மண்குண்டு ஊரணி நடைபயிற்சி மேடையில் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் வரிப்பணத்தில் 1 கோடிக்கும் மேல் […]
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதியார் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் B.மலர்விழி ஜெயபாலா அவர்களின் தலைமையில்,ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தொகுதி,ராமநாதபுரம் […]