தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமரை ஊராட்சி ஏமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணியின் போது அங்கிருந்த மக்களை இப்பகுதிக்கு அரசு நிலம் வழங்கி குடியேற்றியது இந்த நிலையில் 91 ஆண்டுகளாக எமனூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா வேண்டி ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் செய்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்திய பின்பு 1997 ஆம் ஆண்டு சுமார் 450 வீடுகளுக்கு பட்ட வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏமனூர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடி தண்ணீர்,மின்சாரம்,ஆரம்ப சுகதரநிலைய மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதி அனைத்தையும் இப் பகுதி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வீட்டு மனை பட்ட வழங்கிய அடிப்படையில் அடிப்படை வசதிகள் அரசு வழங்கியது. இதனை அடுத்து சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்த பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நெருப்பூர் – ஏமனூர் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு திட்டங்கள் எதுவும் இந்த கிராம மக்களுக்கு வருவதில்லை இது குறித்து அரசு அதிகாரிகளிடம் இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபொழுது அரசு வழங்கிய பட்டா போலியானது என்றும் இப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லை அதனால் அரசு திட்டங்கள் எதுவும் இப்பகுதிக்கு வழங்க இயலவில்லை என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள தெருகளுக்கு சிமெண்ட் சாலை அமைத்தல் இலவச வீட்டு மனை உள்ளிட்ட திட்டங்கள் இப்பகுதியில் பட்டா இல்லாததால் செயல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கின்றன எனவே இதனை கண்டித்தும் சுமார் 100 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் இப்பகுதி மக்கள் 2026 தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஏமனூர் கிராமத்தில் இருந்து திருவோடு ஏந்தி ஊர்வலமாக மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்தும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Posts
தமிழ்நாடு முழுவதிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான தனது சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம் தனது பிராண்டு தூதராக பிரபல திரைப்பட நட்சத்திரம் திரிஷா கிருஷ்ணன் நியமனம்
- admin
- July 18, 2025
- 0
ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்தஅடிஷியா நிறுவனம்,தனது விளம்பர தூதராக பிரபல திரைப்பட நடிகை த்ரிஷாவை நியமனம் செய்துள்ளனர்.. இந்நிலையில் அடிஷியா தனது புதிய துவக்கமாக […]
கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் உள்ள, அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்பள்ளி மாணவ பிரதிநிதிகள் பதவியேற்பு விழாமாணவர்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
- admin
- July 1, 2026
- 0
கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிற அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் செயலர் பிரேம்குமார் மற்றும் துணைச் செயலர் பிரேம்சந்த் ஆகியோரின் ஆலோசனையின் […]
திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக கந்திலி ஒன்றியம்.. விளக்கம் நத்தம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு
- admin
- September 17, 2025
- 0
திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் டி […]
