தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமரை ஊராட்சி ஏமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணியின் போது அங்கிருந்த மக்களை இப்பகுதிக்கு அரசு நிலம் வழங்கி குடியேற்றியது இந்த நிலையில் 91 ஆண்டுகளாக எமனூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா வேண்டி ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் செய்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்திய பின்பு 1997 ஆம் ஆண்டு சுமார் 450 வீடுகளுக்கு பட்ட வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏமனூர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடி தண்ணீர்,மின்சாரம்,ஆரம்ப சுகதரநிலைய மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதி அனைத்தையும் இப் பகுதி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வீட்டு மனை பட்ட வழங்கிய அடிப்படையில் அடிப்படை வசதிகள் அரசு வழங்கியது. இதனை அடுத்து சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்த பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நெருப்பூர் – ஏமனூர் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு திட்டங்கள் எதுவும் இந்த கிராம மக்களுக்கு வருவதில்லை இது குறித்து அரசு அதிகாரிகளிடம் இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபொழுது அரசு வழங்கிய பட்டா போலியானது என்றும் இப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லை அதனால் அரசு திட்டங்கள் எதுவும் இப்பகுதிக்கு வழங்க இயலவில்லை என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள தெருகளுக்கு சிமெண்ட் சாலை அமைத்தல் இலவச வீட்டு மனை உள்ளிட்ட திட்டங்கள் இப்பகுதியில் பட்டா இல்லாததால் செயல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கின்றன எனவே இதனை கண்டித்தும் சுமார் 100 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் இப்பகுதி மக்கள் 2026 தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஏமனூர் கிராமத்தில் இருந்து திருவோடு ஏந்தி ஊர்வலமாக மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்தும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Posts
வயதான முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்வு, மூட்டு வலி, தோல்பட்டை இறுக்கம் முதுகு வலி, முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், ஊசி மூலமாகவே தீர்க்கும், புதிய மருந்துவமுறையை கையாளும் பெத்தேல் மருத்துவமனை
- admin
- September 17, 2025
- 0
கோவை காந்திபுரம் 100அடி சாலையில் பெத்தேல் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனையில், எலும்பியல் நிபுணராக, டாக்டர் சாமுவேல் அனந்தராஜ் சிறிய அளவிலான ஊசிகள் மூலம் பெரிய அறுவை சிகிச்சைகளை தவிர்க்கலாம் எவ்வாறான சிகிச்சைகளுக்கு இந்த […]
சிறுமலை பகுதியில் வனத்துறை அதிகாரிகளின் ஆதரவோடு வெட்டப்படும் மரங்கள்.உரிய நடவடிக்கை எடுப்பரா உணவு துறை அமைச்சர் ? ஆர்வலர்கள் கேள்வி.
- admin
- September 22, 2025
- 0
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆதரவோடு சிறுமலை பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டி குவிக்கப்படும் மரங்கள் வனங்களை அளிப்பவர்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. வெட்டப்படும் மரங்களுக்கு குறியீடு கிடையாது வெட்டப்பட்ட […]
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மதுபானக்கூடம் கேட்டின் முன்பு சுரேஷ் என்பவரை தமிழ்ச்செல்வன் என்பர் குடிபோதையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
- admin
- January 21, 2026
- 0
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் […]
