ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிஅமைச்சர் த மு அன்பரசன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

கோவையில் நடைபெறவுள்ள குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் த மு அன்பரசன் கலந்து கொண்டு குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மூலம் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இணைந்து TNGSS 2025 என்ற வடிவில் மனிதசங்கிலி உருவாக்கினர்.

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஸ்டார்ட்அப் டிஎன் உடன் இணைந்து, கோவையில் வரும் அக்டோபர் மாதம் 9 மற்றும் 10ம் தேதியில் நடைபெறும் தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் R. சுந்தர், விழாவிற்குத் தலைமை வகித்து, புத்தாக்கம் சார்ந்த முயற்சிகளை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் மாண்புமிகு டி.எம். அன்பரசன், கலந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட “புதுமையில் ஒற்றுமை – தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு 2025 க்கான மனித உருவாக்கம் ரோடு ஷோவை கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைத்தார். இதில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இணைந்து TNGSS 2025 என்ற வடிவில் மனிதசங்கிலி உருவாக்கினர்.

இது அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் உள்ள CODISSIA வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ள உலகளாவிய தொடக்க உச்சி மாநாடு 2025 க்கான முன்னோடி மற்றும் விழிப்புணர்வு தளமாக இருக்கும் என கூறினார் .

மேலும் அவர் பேசுகையில் ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் தொடங்குவதில் தமிழ்நாடு கடந்த ஆட்சியில் கடைசி இடமான 21 வது இடத்தில் இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்றும். தற்போது வரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தொடர்ந்து குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மூலம் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். அதுல் ஆனந்த், ஐ.ஏ.எஸ்., ஸ்டார்ட்அப் டிஎன் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன், 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100 தொடக்க நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

டி என் ஸ்டார்டப் சார்பாக துணைத்தலைவர் சிவக்குமார், இணைத்தலைவர் பொன்னி, கோவை ஸ்டார்ட் அப் பிராஜெக்ட் லீடர் காயத்திரி, துணை முதல்வர் டாக்டர் வி.கருப்புசாமி, மற்றும் கல்லூரியின் ஸ்பார்க் இன்குபேஷன் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கே.என். திருக்குறள்கனி , மற்றும் ரவீன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.