
இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் ஐ.சி.எம்.ஏ.ஐ அமைப்பு, தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் மாநாட்டை கோவையில் ஜனவரி 9ம் தேதி முதல் 11ம் தேதிவரை சின்னியம் பாளையம் பகுதியில் நடத்தி வருகின்றது. என்.சி.மேக் 2026, எனும் தலைப்பில் நடைபெறும் இந்மாடாடு ரைஸ் இந்தியா எனும் கரு பொருளில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டின் மூலமாக, உறுப்பினர்களை மறுநிலைப்படுத்தல்,வளர்ச்சியை தீவிரப்படுத்தல், திறன் வலுப்படுத்தல் மற்றும் திறன்களை மேம்படுத்தல்” என்ற உட்கருத்தின் தலைப்புகளில் இம்மாநாடு நடைபெற உள்ளது. “விக்சித் பாரத் 2047” என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் அங்கமான, அடக்கவிலை போட்டித் திறனை வலுப்படுத்துதல், உற்பத்தித் திறனை உயர்த்தல், சுற்றுச்சூழல் சமூக மற்றும் ஆளுமை நிலைத்தன்மை மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துதல், தொழிற்புரட்சி 5.0, உலகளாவிய ஆலோசனை சூழல் மற்றும் உருவெடுக்கும் தொழில்நுட்பங்கள், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தரவு சார்ந்த முடிவெடுக்கும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் சி.எம்.ஏ
உறுப்பினர்களின் முக்கியத்துவத்தை இம்மாநாடு வெளிபடுத்தும் இம்மாநாட்டில் மத்திய, மாநிலப்பொதுத்துறை, தனியார் மற்றும் உயர்கல்வி நிறுமங்கள், உயரிய தணிக்கை-ஆலோசனை நிறுமங்களைச் சார்ந்த சாலச்சிறந்த வல்லுனர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கேற்க்க உள்ளதாக இது குறித்த செய்தியாளர்கள் சத்திப்பின் பொழுது சி.எம்.ஏ. அமைப்பின் முதன்மை புரவலர் ஸ்ரீனிவாச பிரசாத் தெரிவித்தார்
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள மெர்லீஸ் உணவகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், தொழில்துறை கூட்டமைப்புகள், அரசு மற்றும் அரசு சாரா ஒழுங்குமுறை அமைப்புகள், நிதி நிறுவனங்கள், பிற தொழில்முறை அமைப்புகளைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும், மாநாட்டின் நிகழ்ச்சிகள் நேரலையாக வழங்கப்படுகின்றதாகவும், தொழில்முனைவு மனப்பாங்கு, வலுவான தொழில்துறை அடித்தளம், புதுமை சார்ந்த சூழல் ஆகியவற்றில் புகழ்பெற்ற கோவையில், சிறப்பு மிகு இம் மாநாடு நடைபெறுவது பெருமைமிக்க தருணம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
