
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 11-11-1919ம் தேதி, சேத் சீதாராம் பொதார் என்பவரால், நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது. வங்கியின் 107வது நிறுவன நாள் விழா மும்பையில் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இதன் சிறப்பு நிகழ்வு கோவை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மும்பை விழாவில் நிதித்துறை சேவைகள் செயலர் நாகராஜூ முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில், வளரும் பாரதத்தின் தொலைநோக்கு இயக்கத்திற்கு உதவிடும் இயக்கத்தின் இந்த ஆண்டின் கருப்பொருளான ஒன்றிணைந்து ஒளிரும் எதிர்காலத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்விற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆஷீஸ் பாண்டே தலைமை தாங்கினார். செயற்குழு இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில், நடைபெற்ற நிகழ்விற்கு, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், பிராந்திய தலைவர் எஸ்.எஸ். லாவண்யா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள், வங்கி தொழிலாளர்கள் தங்களது, குடும்ப உறுப்பினர்களோடு பங்கேற்று சிறப்பித்தனர் இதில் வங்கி ஊழியர்களின் நடன நிகழ்ச்சி, தனிதிறன் வெளிப்பாடு, குழுத்திறன் வெளிப்பாடு என பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
