திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசலை உருவாக்கவே இதுபோன்ற சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது – நல்லமணி ஆதங்கம்,

மதுரை காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நல்லமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் சந்திப்பில்,
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாகவும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற சுவர் ஒட்டி ஒட்டபட்டுள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசலை உருவாக்கவே இது போன்ற சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது, இந்த சுவரொட்டி யார் ஒட்டினார்கள் என்று தெரியவில்லை, ஒரு வேலை காங்கிரஸ் தொண்டர்கள் ஒட்டி இருந்தால் அவர்களைப் பற்றிய தகவல் கட்சியின் மேல் இடத்துக்கு அனுப்பப்படும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும், அவர்கள் இல்லை என்றால் வேற எந்த கட்சியை சார்ந்த நபர்கள் இந்த சுவரொட்டியை ஒட்டி இருந்தால் அவர்கள் மீது காவல்துறையில் புகார்கள் தெரிவிக்கப்படும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் இவ்வாறு கூறினார், இந்நிகழ்வில் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தல்லாகுளம் முருகன் உடன் இருந்தார்,