
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய அளவிளான வில்வித்தை போட்டி நடைபெற்று உள்ளது. அதில் திருப்பத்தூர் கிங் வில் வித்தை அகாடமியை சேர்ந்த வில் வித்தை வீராங்கனை மாணவிகள் 3 பேர் பஞ்சாப்பில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான தேசிய வில் வித்தை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்ற 3 மாணவிகளும் வெள்ளி பதக்கம் வென்று வீடு திரும்பிய அவர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வீராங்கனைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினர். இதனால் வீராங்கனை மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
