வாகன பதிவு சான்றிதழை வாகன சட்டபிரிவு 430 ன் படி நேரில் வழங்கும் முறையையும் பின்பற்ற வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பினர் கோவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன பதிவு தொடர்பான ஆவணங்களை நேரில் வழங்குவது தொடர்பான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்..
தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்டோ கன்ஸல்டன்ட் மற்றும் டீலர்ஸ் வெல்ஃபேர் அசோயேஷன் பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு மாநிலத்தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான பி.எஸ்.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு. தொடர்ந்து தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின் தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆர். சி. புக் தபாலில் அனுப்புவதால் பெரும் சிக்கல்களை வாகன வியாபாரிகள் சந்தித்து வருவதாகவும்,இந்த விதிமுறைகளை செயல்படுத்திய அண்டை மாநிலங்கள் இதற்கு விலக்கு அளித்துள்ளதை அவர் சுட்டி காட்டினார்..
எனவே வாகன பதிவு சான்றிதழ்களை வாகன பிரிவு சட்டம் 430 ன் படி நேரில் வழங்கும் முறையையும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்..

இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஏற்கனவே மனு வழங்கியுள்ளதாக கூறிய அவர்,தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆர்.சி.புத்தகம் தபாலில் பெறுவதால் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்புகள் எற்படுவதாக கூறிய அவர், இந்த கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்..

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், முருகேஷ் குமார் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.