
64 ஆவது தேசிய மருந்தியல் வாரம் 2025 ஐ ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் இணைந்து துடியலூரில் போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போதைப் போருட்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இதில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மது போதையில் ஒருவர் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
64 ஆவது தேசிய மருந்தியல் வார விழா 2025 ஐ ஒட்டி இந்திய மருந்தியல் சங்கம் மற்றும் கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் மருந்தியல் கல்லூரி இணைந்து தடுப்பூசி விழிப்புணர்வை முன்னெடுக்கும் மருந்தாளர்கள் கோவை துடியலூரில் இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஒரு பொது விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவை துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணியை துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரூபன்ராஜ் பிரகாஷ் கொடியசைத்து துவக்கிவைத்தார். பேரணி நிகழ்வு தொடங்குவதற்கு முன் மாணவர்களும் ஆசிரி யர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், இயக்குநர் முனைவர் சிவக்குமார், மருந்தியல் கல்லூரி முதல்வர் அழகர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
700க்கும் மேற்பட்ட மருந்தியல் மாணவ மாணவிகள் மற்றும் 42 ஆசிரியர்கள் கலந்து கொண்டு கைகளில் போதைப் போருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, போதை பொருள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். பேரணியானது துடியலூரில் தொடங்கி மேட்டுப்பாளையம் கோவை சாலையில் விஸ்வநாதபுரம் வரை சென்றது.
ஒட்டுமொத்தமாக, போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும், இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தும் இந்த நிகழ்வு பெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மது போதையில் ஒருவர் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
