கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விளக்கப் பாடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது விபத்து

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் வேளாங்கன்னிக்கு
பயணம் செய்தனர்.இவர்களின் கார் விருத்தாசலம் அடுத்த விளக்கப் பாடியில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.இதில்
பேட்ரிக் 50 வயது அவருடைய மனைவி நித்திகா வயது 43மற்றும் மகள் ஆதியா வயது 17 அவர்களுடைய சித்தப்பா உன்னிகிருஷ்ணன் வயது 79 மற்றும் அவரது மனைவி கங்காலட்சுமி வயது 69சென்றனர்.
இதில் கங்கா லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் மூவர்மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அனுப்பப்பட்டனர்.