தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமரை ஊராட்சி ஏமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணியின் போது அங்கிருந்த மக்களை இப்பகுதிக்கு அரசு நிலம் வழங்கி குடியேற்றியது இந்த நிலையில் 91 ஆண்டுகளாக எமனூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா வேண்டி ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் செய்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்திய பின்பு 1997 ஆம் ஆண்டு சுமார் 450 வீடுகளுக்கு பட்ட வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏமனூர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடி தண்ணீர்,மின்சாரம்,ஆரம்ப சுகதரநிலைய மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதி அனைத்தையும் இப் பகுதி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வீட்டு மனை பட்ட வழங்கிய அடிப்படையில் அடிப்படை வசதிகள் அரசு வழங்கியது. இதனை அடுத்து சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்த பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நெருப்பூர் – ஏமனூர் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு திட்டங்கள் எதுவும் இந்த கிராம மக்களுக்கு வருவதில்லை இது குறித்து அரசு அதிகாரிகளிடம் இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபொழுது அரசு வழங்கிய பட்டா போலியானது என்றும் இப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லை அதனால் அரசு திட்டங்கள் எதுவும் இப்பகுதிக்கு வழங்க இயலவில்லை என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள தெருகளுக்கு சிமெண்ட் சாலை அமைத்தல் இலவச வீட்டு மனை உள்ளிட்ட திட்டங்கள் இப்பகுதியில் பட்டா இல்லாததால் செயல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கின்றன எனவே இதனை கண்டித்தும் சுமார் 100 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் இப்பகுதி மக்கள் 2026 தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஏமனூர் கிராமத்தில் இருந்து திருவோடு ஏந்தி ஊர்வலமாக மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்தும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Posts
மாநில அளவில் பதக்கங்களை வென்ற சீர்காழி பள்ளி மாணவர்களை வாழ்த்திய பின்னணி பாடகர் வேல்முருகன்
- admin
- October 21, 2024
- 0
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தனியார் பள்ளி மாணவர்கள்தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச்வாலிபால் போட்டியானது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டியில்மாணவிகள் பீச் வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் நித்திஷ்வரி, சுந்தரநாயகி, ஆண்கள் பிரிவில் […]
அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சாமு தலைமையில் நடைபெற்றது.
- admin
- December 13, 2025
- 0
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜி. ஷாமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி?’ என்பது குறித்து நிர்வாகிகளிடையே விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.அரசியல் […]
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு!!!
- admin
- July 25, 2025
- 0
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் பட்டணம்காத்தான் கிங்ஸ் பேலஸ் மஹாலில் நடந்தது.மாவட்ட அவைத் தலைவர்,முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ,வனத்துறை அமைச்சர்,தேர்தல் பணிக்குழு தலைவர் […]
