கோவை பெரியநாயக்கன்பாளையம்தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்க விழாசுபேதார் தமிழரசன் தொடங்கி வைத்தார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் முதன் முறையாக தேசிய மாணவர் படை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தழிழ்நாடு 6 வது தேசிய மாணவர் படை மெட் கம்பெனி கோவை இராணுவ பிரிவின் சுபேதார் தழிழரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு என் சி சி அரங்கம் மற்றும் பெயர் பலகையினை திறந்து வைத்து தேசிய மாணவர் படையில் இணைந்துள்ள மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.

தேசப்பற்றும், ஒழுக்கமும், அர்ப்பணிப்பும், மாணவர்களுக்கு உடற்தகுதி, சமூக சேவை மற்றும் தேசியப் பெருமை போன்றவற்றை வளர்க்கும் தேசிய மாணவர் படை பிரிவு கோவை யுனைடெட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக்கொடியை யுனைடெட் கல்வி நிறுவனங்களின் இணைத் தலைவர் மற்றும் தி யுனைடெட் பப்ளிக் பள்ளி செயலர் மைதிலி சண்முகம் ஏற்றி வைத்து மரியாதை செய்தார். சாரணர் கொடியினை யுனைடெட் பப்ளிக் பள்ளி சாரணர் பிரிவு மாணவர் ஆதுரா ஏற்றி வைத்தார். தேசிய மாணவர் படையின் கொடியினை தழிழ்நாடு 6 வது தேசிய மாணவர் படை மெட் கம்பெனி கோவை இராணுவ பிரிவின் சுபேதார் தழிழரசன் ஏற்றிவைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து தேசிய மாணவர் படையின் பாடல் ஒலிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தேசிய மாணவர் படை மாணவர்கள் சிறப்பு விருந்தினருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அதனை சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டு அணிவகுப்பு மரியாதை வழங்கிய மாணவர்களிடம் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக யுனைடெட் பப்ளிக் பள்ளியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மாணவர் படை அறையினை சுபேதார் தழிழரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து யுனைடெட் பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்பாக தேசிய மாணவர் படையினர் தங்களது அணிவகுப்பு சாகசங்களை செய்து காண்பித்தனர். அதனை மாணவ மாணவிகள் வியந்து பார்த்து ரசித்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுடன் தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள், சாரணர் மாணவ மாணவிகள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து யுனைடெட் கல்வி நிறுவன சரஸ்வதி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் யுனைடெட் பப்ளிக் பள்ளி முதல்வர் ஹரிணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள தேசிய மாணவர் படையின் பெயர் பலகையினை சிறப்பு விருந்தினர் சுபேதார் தழிழரசன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய சுபேதார் தழிழரசன், தான் படிக்கும் போது சுமாரான மாணவராக இருந்து ஆசிரியர்களிடம் திட்டு வாங்கியிருந்தாலும் பிறகு நன்றாக படித்து தேசிய மாணவர் படைப்பிரிவில் உயர்ந்த பதவியை அடைந்து, சீருடையில் தனது ஆசிரியரை சந்தித்து பெருமையடைந்த தருணங்களை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, தேசிய மாணவர் படையின் இணைந்துள்ள புதிய மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியின் தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசும்போது, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று தற்போது இல்லை, உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது. எனவே கவனம் சிதறாமல் நன்றாக படித்து இப்பள்ளியில் படித்த மாணவ மாணவிகளில் ஐ ஏ எஸ், ஐ பி எஸ் என வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இறுதியில் யுனைடெட் பப்ளிக் பள்ளி ஆசிரியர் நன்றி கூறினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு யுனைடெட் பப்ளிக் பள்ளி சார்பாக மலர் கொத்து கொடுத்து வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் இளைய மாணவர் பிரிவைச் சேர்ந்த கப்ஸ் மற்றும் புல்புல் மாணவ மாணவிகள் கைகள் தட்டியும், பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும் சிறப்பான வரவேற்பு வழங்கினர்அதேபோல் யுனைடெட் பப்ளிக் பள்ளி சாரணர் பிரிவு மாணவ மாணவிகள் பாரம்பரிய முறையில் தேசியக்கொடி மற்றும் சாரணர் கொடிகளை ஏந்தி சல்யூட் அடித்து அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.
தொடர்ந்து சாரணர் மற்றும் வழிகாட்டி மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் இணைந்து டிரம்ஸ் இசையுடன் அணிவகுப்பு நடத்தி, வணக்கம் செலுத்தி வீறு நடை போட்டு விழா நடைபெறும் இடத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் அழைத்து வந்தனர். வரும் வழியில் இரு புரமும் யுனைடெட் பப்ளிக் பள்ளி சாரணர் மற்றும் என் சி சி மாணவ மாணவிகள் நின்று கைகளை தட்டி வரவேற்பு வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில் யுனைடெட் பப்ளிக் பள்ளி துணை முதல்வர் அனிதா தேவப்பிரியா, பள்ளி தேசிய மாணவர் படை பயிற்சியாளர் பசுவதேவன், தழிழ்நாடு 6 வது தேசிய மாணவர் படை மெட் கம்பெனி கோவை இராணுவ பிரிவின் கேப்டன் கியானேஸ்வர் பாரிஷ், ஹவில்தார் என் கே பிபின் லாக்ரா, யுனைடெட் பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள், யுனைடெட் கல்வி நிறுவனங்களில் கல்லூரி, பள்ளி உடல்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்..