கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் பட்டாசு வெடிப்பது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த பட்டாசுகளை வெடிப்பவர்கள் பாதுகாப்பின்றி வெடிப்பதால் அதிக அளவில் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்ட கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் தமிழக அரசு பட்டாசுகளை வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் என நேரம் ஒதுக்கி பட்டாசுகளை வெடிக்க உத்தரவிட்டுள்ளது. அவைகனை மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும் என தீயணைப்பு துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் போச்சம்பள்ளி தீயணைப்பு துறை சார்பில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் பட்டாசு வெடிப்பது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்தன் மற்றும் துணை நிலைய அலுவலர் சீனிவாசன் ஆகியோர் பட்டாசுகளை வெடிக்கும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கம் அளித்தார். அதே நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர். இதில் ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, உதவி தலைமை ஆசிரியர் மயில்வாகணன், அமுதன், வெற்றி செல்வன், கணினி ஆசிரியர் முத்துகுமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் இந்த விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறையினர் கொடுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியினை திட்ட அலுவலர் சங்கர் ஏற்பாடு செய்திருந்தார்.
