
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பார்த்தசாரதி தெருவில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகதா என்பவர் தங்கள் வீட்டில் அருகாமையில் பெட்ரோல் பங்க் வருவதால் வரும் காலங்களில் தங்களின் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் ஆகையால் இந்த பெட்ரோல் பங்க் இங்கு வராமல் வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்கள் வீட்டின் அருகாமையில் புதிதாக அமைக்கப்படும் பெட்ரோல் பங்கை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
