திருப்பத்தூரில் தமிழக முதல்வரை கண்டித்து சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது

அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்த நிலையில்

திருப்பத்தூர் ஹவுசிங்போர்டு பகுதியில் தமிழக முதல்வரை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், திடீரென பாகவினர் சிலர் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி திருப்பத்தூர் – தர்மபுரி சாலையில் சென்ற அரசு பேருந்து மறித்து, சாலையில் படுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் நடைபெற்றது

அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்..