
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அண்ணா நகர் பகுதியில் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.
அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நான் திருப்பத்தூர் தொகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ளேன்.
கடந்த ஐந்து வருடம் அதிமுக ஆட்சியில் விட்டு கொடுக்க கூட எம் எல் ஏவை மேடை ஏற்றி பேச வைக்க மாட்டார்கள்.
ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அனைத்தும் மாறிவிட்டது என பேசினார். இதன் காரணமாகவே தற்போது அண்ணா நகர் பகுதியில் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். 35 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் வினோதினி டாக்டர். பொதுக்குழு உறுப்பினர் அரசு. மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் பொன் நாகராஜ். என்கின்ற நாகு. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ்மணி.ஸ்ரீதர். நகர மன்ற உறுப்பினர் பிரேம்குமார். வெள்ள ராஜா. அசோக் குமார். வாசு. சுதாகர். கோபி. பெருமாள் ராஜ்குமார். பிரதீஸ்வரன். விஜயகாந்த். ராம்.
இதில் மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
