கூடலூர் நகர திமுக கழகம் சார்பில் உதயநிதி ஸ்டாலின்48 வது பிறந்தநாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசினார்

அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று புதுக்கோட்டையில் பேசிய அமித்ஷா அவர் வாயாலயே அறிவித்துவிட்டார் என்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசினார்.

கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக கழகம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி சார்ஜர் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சி தலைவரும் நகரச் செயலாளருமான அறிவரசு தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தோணிராஜ் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா 2019ஆம் ஆண்டு வந்தபோது பேசியதையே மீண்டும் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் அவர் பேசும்போது அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்பதை அவர் வாயாலயே பேசி உறுதி செய்து விட்டார். உதயநிதி முதல்வர் ஆனால் தளபதி ஸ்டாலின் இந்தியாவின் பிரதமர் ஆவார்.

அமித்ஷா பேசியதில் தமிழ்நாட்டில் அ தி மு க ஆட்சி என்றோ எடப்பாடி முதல்வராக வரவேண்டும் என்றோ சொல்லவில்லை. மோடி தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைய வேண்டும் என்று திட்டவட்டமாக பேசி உள்ளார். அந்தக் கூட்டணியில் அ தி மு க இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும். அரசு ஊழியர்கள் போராடினால் சிறையில் அடைப்பதாக அமித்சா சொல்கிறார். மத்திய அமைச்சராக இருக்கும் அவர் சரியான முறையில் பேச வேண்டும்.

செந்தில் பாலாஜி பொறுப்பாளராக உள்ள கொங்கு மண்டலத்தில் பத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்று இன்றைய கருத்துக்கணிப்பு சொல்கிறது. மீதி உள்ள தொகுதிகளிலும் வெற்றி பெற்று நூற்றுக்கு நூறு சாதிப்போம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருநூறு தொகுதியில் அல்ல 220 தொகுதிகளுக்கு மேல் தி மு க தமிழ்நாட்டில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெறும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி ஆர் ராமச்சந்திரன், அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம், சட்டத்துறை இணைச் செயலாளர் சூர்யாவெற்றிகொண்டான், ஒன்றிய செயலாளர் எஸ் எம் டி கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார், நகர செயலாளர்கள் முனுசாமி, அசரப் அலி, முகமது யூனுஸ், அவைத்தலைவர் பிரபு, பொருளாளர் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள் கிருபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் உதயகுமார், துணை அமைப்பாளர்கள் சிவசுப்பிரமணியம், குணசேகரன், பாலசுப்ரமணியம், உதயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, தலைமைக் கழக பேச்சாளர்கள் திருப்பூர் கூத்தரசன், உடுமலை தண்டபாணி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் பத்மாவதி, பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி தமிழ் என்பவர் தி மு க ஆட்சி பற்றியும் தமிழ் வளர்ச்சி பற்றியும் பேசினார். அவருக்கு அமைப்புச் செயலாளர் பாரதி பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.