
கோவை பீளமேடு அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள “கோ இந்தியா” அரங்கில், உலக யோகா தினத்தை முன்னிட்டு சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் மற்றும் புனர்ஜீவன் ஆயுர்வேத நிலையம் ஆகியோர் இணைந்து, இயற்கை மற்றும் யோகா புத்தகங்கள் வெளியீடு விழா நிகழ்ச்சி நடைபெற்றதுடன், யோகாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிவசைலம் இயற்கை உணவின் தூதுவர் டாக்டர் அப்பன், ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழக செயலாளர் முத்துக்குமார், ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் இணை செயலாளர் கணேஷ் பாபு, மண்டல செயலாளர் முத்துமாணிக்கம், ஸ்ரீ காயத்ரி இயற்கை வைத்தியசாலை சண்முகவேல், அண்ணா யுனிவர்சிட்டியின் கோவை ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி, கோவை கலைமகள் கல்லூரியின் முதல்வர் மாலா, வணிகவரித்துறை இணை இயக்குனர் ஓய்வு கணேசன், மதுரை நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் அனைத்து சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பரை செய்தார் சுப்ரா யோகா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சுப்பரமணியன் நாச்சியப்பன். இந்த விழாவின் சிறப்பாக யோகா மாணவர்களின் பல்வேறு யோகாசனங்கள் பார்வையாளர்ஙளை வியப்பி ஆழ்த்தியது தொடர்த்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுப்ரா யோகா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சுப்பரமணியன் நாச்சியப்பன் கூறியதாவது
இன்றைந நவீன உலகில் அனைத்தும் மாறி வருகின்றது. உணவு பழக்கவழக்கங்கள், நோய்கள், உள்ளிட்டவைகள் மனித குலத்திற்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தி வருகின்றது இவற்றை முழுமையாக நீக்க யோகா சிறந்த மருத்துவம், அதீத இரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைவருக்கும் யோகா உடல்நிலையை மட்டுமின்றி அவர்களின் மனநிலையைம் ஒரு நிலை படுத்தி அவர்களை தற்காக்க ஒரு கேடயமாக பயண்படுகின்றது எனவே யோகா பயிற்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்று கொள்ளுவது இன்றைய தலைமுறைக்கு அவசியம் என்றார்.
