
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திருமகள் திரையரங்கில் படையாண்ட மாவீரா திரைப்படம் வெளியானது
மேலும் இப்படம் ஆனது காடுவெட்டி குருவின் சிறு வயது முதல் இறப்பு வரை அவருடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாகக் கொண்டதுதான் இந்த படையாண்ட மாவீரா என பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி கே ராஜா தெரிவித்தார்
மேலும் டி கே ராஜா செய்தியாளருக்கு பேட்டியின் போது
காடுவெட்டி குருவும் நானும் சட்டசபையில் அருகாமையில் ஒன்றாக அமர்ந்திருப்போம் திருப்பத்தூர் பகுதிக்கு வருகை புரிந்தால் காடுவெட்டி குரு எங்கள் வீட்டில் தான் உணவு அருந்துவார் என தெரிவித்தார்
இத்திரைப்படத்தில் வன்னியர் கானா திரைப்படம் அல்ல அனைத்து சமூகத்திற்கான திரைப்படமாக காண்பித்துள்ளார்கள் தமிழ் குடிகள் எல்லாம் ஒன்றாய் இணைந்தால் தமிழ்நாட்டை ஆள முடியும் எனவே நாம் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என திரையில் காட்டியிருக்கிறார்கள் என தெரிவித்தார்
மேலும் ஏழு டாக்டர் அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்தவர் காடுவெட்டி குரு என பெருமிதம் தெரிவித்தார் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்
பின்பு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இவர்களின் உண்மை விசுவாசியாகவும் எப்பொழுதும் தங்களை பிரிக்க முடியாது எனவும் இத்திரைப்படத்தை திருப்பத்தூர் பகுதியை சார்ந்த தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி டைரக்டர் கௌதம் இருவரும் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு படைப்பாக வெளிப்படுத்தி திரையரங்குகளில் காண்பித்துள்ளார்கள்
இப்படத்தினை ஒரு படமாக பார்க்காமல் ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து செய்து வெற்றி பெறுவோம்கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார்மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆனந்தன்பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த படத்தினை பார்த்து கண்கலங்கி வெளிய வந்த காட்சி

பின்பு அப்படிப்பட்ட ஒரு படையாண்ட மாவீரனை இழந்து விட்டோம் காடுவெட்டி குருவின் இறுதி சடங்கிற்கு நான் சென்றிருந்தேன் என கண்ணீர் மல்க செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்
