10ம் வகுப்பு பொதுத் தேர்வில்காரமடை எஸ் வி ஜி வி பள்ளி 18 வது ஆண்டாக 100% தேர்ச்சிமாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு

கோவை காரமடை எஸ் வி ஜி வி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 18 வது ஆண்டாக 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. சாதனை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவை காரமடை எஸ் வி ஜி வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் 179 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தொடர்ச்சியாக 18 ஆண்டுகளாக இப்பள்ளி 100% தேர்ச்சியை பெற்று சாதனை படைத்து வருகிறது.

பள்ளி அளவில் மாணவர்கள் நவ்தீப்,நிலாக்‌ஷா ஆகியோர் 493 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், மாணவன் கிஷோர் 492 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடத்தையும்,மாணவன் ஐசக் ஹனீப் 491 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும்,பாடவாரியாக கணிதத்தில் ஒரு மாணவரும்,அறிவியலில் 4 மாணவர்களும், சமூக அறிவியலில் 9 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும்,480 மதிப்பெண்களுக்கும் மேல் 22 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கும் மேல் 62 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கும் மேல் 112 மாணவர்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களையும்,அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் தாளாளர் டாக்டர் பழனிசாமி, முதல்வர் சசிகலா, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர்கள் தாரகேஸ்வரி, ராஜேந்திரன், வேலுச்சாமி, நிர்வாக அலுவலர் சிவ சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.